நிதம் நிதம் மூச்சை மட்டுமே விழுங்கி,
உயிர் வளர்க்கும் எங்கள் ஏழைச் சிறார்கள்!!
இவர்களுக்கும் பசிப்பதில்லை!
இருப்பவன் இருந்தால் விரதம்!
இல்லாதவன் இருந்தால் பட்டினி!
கருமம்..
கொடுத்துத்தான் பாருங்களேன்!!
ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! அவை நாம் ஏற்றங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!
No comments:
Post a Comment