அவன் ஒரு நல்ல தேரோட்டி!
தன் கடிவாளத்தை தானே உடைத்து விட்டபோதும்!!
அவன் ஒரு நல்ல தொழிலாளி!
தன் முத்தொழிலையும் தாரைவார்த்துவிட்டபோதும்!!
அவன் ஒரு மானங்கெட்டவன்!
தன் இருப்பையே சந்தேகித்தவர்களை சகித்துகொள்ளும்போது!!
இப்போது அவன் கையிலிருப்பது,
அந்த உடைந்த கடிவாளமும்,
உருவாக்கியவன் என்ற பேரும்தான்!!
ஆனால்...
இன்றும் எல்லாம் அவன் செயல்!!
தீவிரவாத தாக்குதல் உட்பட!!