இறை சிற்பி துன்பத்தால் செதுக்கும் சிற்பம் நீ!
செதுக்குகையில் உடையும் சிற்பங்களுமுண்டு!
செதுக்க செதுக்க உயர்ந்து உயர்ந்து சிதைக்க சிதைக்க வளர்ந்து வளர்ந்து
மாடத்தில் மிளிரும் சிலைக்களுமுண்டு !
உளி தரும் வலிதான்
சிலைபெறும் உயிர்!
உடைத்துப்பார்க்க சிற்பியும் விரும்புவதில்லை!
சிற்பமும் விரும்புவதில்லை!!!
ஆனால்
உடைந்தேவிடுகிறது சிற்பம்!
கல்லின் வலியும்
உளியின் வலுவும் தெரிந்த சிற்பி செதுக்குகையில் உடைவது
கல்லின் பிழையே !
மனிதா!
இறைவனின் இறைசிற்பமே!
இனியாவது உடைந்து உடைந்து பழகாமல்,
உயர்ந்து உயர்ந்து பழகு!