ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Saturday, September 20, 2008

நிலா என் தீவுக்கடியில்...

வெற்றிடத்தில் அலையும் வினோத பிராணி!
சந்தோஷத்திலும் துக்கத்திலும் கிளர்ந்தெழுந்து,கவிதையை மட்டுமே உமிழ்ந்துசமநிலையடையும் என் மனம்!

ஆம்! என் கவிதைகளும் ஓர் அணுப்பிரளயம்தான்!

அவை இருட்டில் தொலைந்து, வெளிச்சத்தில் தேடிய சில்லறைகளல்ல!வெளிச்சத்தால் தொலைத்து,இருட்டில் மட்டுமே கிடைக்கும் நட்சத்திரங்கள்!!

அவை நிலவுக்காகக் காத்திருந்து,
வார்த்தைகளுக்காக தவமிருந்து,கிடைத்த வரங்கள்!
என் வலிமண்ணில் பூத்த பூக்கள்!!

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!